9 மாதங்களில் 11,300 கிலோ போதை பொருள் பறிமுதல்

by Staff / 12-10-2022 10:55:52am
9 மாதங்களில் 11,300 கிலோ போதை பொருள் பறிமுதல்

மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் நடப்பு ஆண்டின் 9 மாதங்களில் 11,300 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 58 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டில் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட அவற்றுடன் தொடர்புடைய மொத்தம் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும் என அந்த வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via