வீட்டில் போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் கைது-முதல்வர் மாய உலகத்தில் இருந்து  வெளியே வர வேண்டும்-எடப்பாடி 

by Editor / 24-10-2024 04:06:16am
வீட்டில் போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் கைது-முதல்வர் மாய உலகத்தில் இருந்து  வெளியே வர வேண்டும்-எடப்பாடி 

சென்னையில் வீட்டையே ஆய்வகமாக மாற்றி மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியே வாங்கிய போதைப்பொருள் தரமில்லாததால், சவுகார்பேட்டையில் வேதிப்பொருட்கள் வாங்கி, வேதியியல் படித்து வரும் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே போதைப்பொருளை தயாரித்துள்ளனர். மேலும், அதனை வெளியில் விற்பனையும் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து போலீசுக்கு தெரியவந்த நிலையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் கைது நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “சென்னையில் வீட்டில் போதைப்பொருள் தயாரித்ததாக கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. போதைப்பொருள் புழக்கம் கட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் மாய உலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியே வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags : வீட்டில் போதைப்பொருள் தயாரித்த மாணவர்கள் கைது-முதல்வர் மாய உலகத்தில் இருந்து  வெளியே வர வேண்டும்-எடப்பாடி 

Share via