ஊரடங்கை கண்காணிக்க  அமைச்சர்கள் நியமனம்

by Editor / 22-05-2021 08:14:32pm
ஊரடங்கை கண்காணிக்க  அமைச்சர்கள் நியமனம்



ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 9-5-2021 அன்று காலை 11-30 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க,  கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும்,  நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அமைச்சர் பெருமக்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவும்  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, கீழ்க்காணும் அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு முதல்வர் நியமித்துள்ளார்.
அதன் விவரம், பின்வருமாறு:
சென்னை மாவட்டம்
மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு
செங்கல்பட்டு -தா.மோ. அன்பரசன், 
கோயம்புத்தூர் மாவட்டம்-அர. சக்கரபாணி, கா. ராமச்சந்திரன்
திருவள்ளூர் மாவட்டம்-சா.மு. நாசர்
மதுரை மாவட்டம்-பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன்
தூத்துக்குடி மாவட்டம்-கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
சேலம் மாவட்டம்-வி. செந்தில்பாலாஜி
திருச்சி மாவட்டம்-கே.என். நேரு
திருநெல்வேலி மாவட்டம்-தங்கம் தென்னரசு
ஈரோடு மாவட்டம்-சு. முத்துசாமி
காஞ்சிபுரம் மாவட்டம்-எ.வ. வேலு
திருப்பூர் மாவட்டம்-மு.பெ. சாமிநாதன்
வேலூர் மாவட்டம்-துரைமுருகன்
விழுப்புரம் மாவட்டம்-க. பொன்முடி,செஞ்சி கே.எஸ். மஸ்தான்,
கடலூர் மாவட்டம்- எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,சி.வி. கணேசன், 
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்-சிவ.வீ. மெய்யநாதன்,
கிருஷ்ணகிரி மாவட்டம்-ஆர். காந்தி
தஞ்சாவூர் மாவட்டம்-அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தேனி மாவட்டம்-இ. பெரியசாமி,
குமரி மாவட்டம்-த. மனோ தங்கராஜ்,இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via