இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.

by Editor / 18-09-2022 10:28:08am
இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.

இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து 13-ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ராணியின் உடலை மன்னர் சார்லசும், ரா கமிலாவும் பெற்று கொண்டனர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராணியின் உடல் வைக்கப்பட்டது.

நாள்தோறும் ஏராளமானோர்  ராணி எல்சபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத்தின் பல்வேறு நாட்டுத்தலைவர்கள் இங்கிலாந்திற்கு சென்றவண்ணம் உள்ளனர்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்  இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்று இரவு விமானம் மூலம் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றார். 

இன்று அதிகாலை லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைந்த அவரை இந்திய தூதர்கள் வரவேற்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெற உள்ள ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.
 

Tags :

Share via