நெல்லையில் அதிமுகவினரோடு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பித்தார்.திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை N.கணேசராஜா தலைமை தாங்கினார்.தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா,தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான .S.செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கழக அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவம். சட்டமன்ற உறுப்பினர்கள் PHP.மனோஜ் பாண்டியன்,இசக்கி சுப்பையா,A.K.சீனிவாசன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் V.முத்தையா,கழக தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் I.S.இன்பதுரை,கழக மகளிரணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்V.M.ராஜலட்சுமி,முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்கள் முத்துக்கருப்பன், செளந்தரராஜன் உட்பட முக்கிய நிர்வாகிகள், வேட்பாளர்கள், தொண்டர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
Tags : அதிமுகவினரோடு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை