மனைவி மகன் கண்முன்பே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை

by Staff / 16-05-2022 12:32:37pm
மனைவி மகன் கண்முன்பே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை


திருவள்ளுவர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனைவி மகன்கள் கண்முன்னே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் குழி மேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மனைவி குழந்தைகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று காரின் மீது வேகமாக மோதியது நிலை குலைந்து பின்பக்கமாக பள்ளத்தில் இறங்கி விட லாரியில் இருந்து இறங்கி 10க்கும் மேற்பட்டோர் மனோகரனை மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அடுத்து மனோகரன் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பொன்னேரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via