முதலமைச்சர் பகவந்த் மான் மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் சந்திப்பு

by Staff / 20-05-2022 12:31:25pm
முதலமைச்சர் பகவந்த்  மான் மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் சந்திப்பு

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து எல்லைப் பாதுகாப்புப் பிரச்சினை குறித்து பேச்சு நடத்தினர். எல்லையில் டிரோன்கள் நடமாட்டம் பாசுமதி அரிசி மீது குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் அமைதியை குலைக்க சில சமூக விரோத சக்திகள் முயற்சிப்பதால் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள். கூடுதலான படைகளை அனுப்பி வைக்குமாறு அமித்ஷாவிடம் கேட்டதாக தெரிவித்தார். சுமார் ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் பஞ்சாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.

 

Tags :

Share via