காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 21-05-2022 09:51:52am
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் பகுதிக்கு 45 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு அணைக்கு வினாடிக்கு 46353 கன அடி (நேற்று பகல் 47 ஆயிரத்து 436 கன அடி) தண்ணீர் வருகிறது. இன்னும் சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடி மற்றும் கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

 

Tags : Extreme levels of flood danger were announced in the Cauvery catchment area today

Share via