மனைவி பிரிந்ததால் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

by Staff / 26-05-2022 03:30:50pm
மனைவி பிரிந்ததால் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உ டைந்ததாகக் கூறப்படும் ஓட்டுநர் ஒருவர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கணபதிபாளையம் சேர்ந்த போர்வெல் வாகன  ஓட்டுநரான செந்தில்குமார் மது அருந்திவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி இந்திராணி பிள்ளைகளுடன் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மனமுடைந்த  செந்தில் குமார் நேற்று மாலை வீட்டுக்கு அருகே மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

 

Tags :

Share via