மணிப்பூரில் பள்ளிக்கு வெளியே பெண் சுட்டுக்கொலை

by Staff / 06-07-2023 03:35:10pm
மணிப்பூரில் பள்ளிக்கு வெளியே பெண் சுட்டுக்கொலை மணிப்பூரில் பள்ளிக்கு வெளியே பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இம்பாலில் உள்ள ஷிஷு நிஷ்டா நிகேஷன் பள்ளி முன் இச்சம்பவம் நடந்துள்ளது. இறந்தவரின் பெயர் விவரம் ஏதும் தெரியவில்லை. மணிப்பூர்ல கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கலவரம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பள்ளிகள் திறக்கப்பட்ட மறுநாள் இதுபோன்ற சம்பவம் நடந்தது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Tags :

Share via