பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் 8 ஆண்டுகள் நிறைவு

by Staff / 31-05-2022 04:23:22pm
 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் 8 ஆண்டுகள் நிறைவு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 8 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் காணொளி மூலம் உரையாற்றுகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடி இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் மக்கள் நலன் காக்கும் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். தொடர்ந்து அரசின் 9 அம்சங்களை மற்றும் துறைகள் உள்ளடக்கிய 16 திட்டங்கள் குறித்து பயணிகளுடன் காணொளி மூலம் பிரதமர் கலந்துரையாடுகிறார். மத்திய அரசின் திட்டங்கள் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளதாக என ஆராய இந்த கலந்துரையாடல் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .10 கோடிக்கும் மேலான விவசாயக் குடும்பங்கள் பயன்பெறும் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11 ஆவது தவணையை பிரதமர் மோடி வெளியிடுகிறார்..நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விழாக்களில் முதலமைச்சர்கள் மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை பொதுமக்களிடமிருந்து பெரும் முயற்சியாக அவர்களுடன் கலந்துரையாட கின்றனர். தொடர்ந்து அனைத்து மாநில முதலமைச்சர்களும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இது தவிர அனைத்து மாவட்ட பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.

 

Tags :

Share via