விருத்தாச்சலத்தில் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கார்மங்குடியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவனும் குறிஞ்சிப்பாடி யைச் சேர்ந்த இளம் பெண்ணும் பழகி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள ஸ்ரீதர் விருப்பம் தெரிவித்தபோது அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் பேச வேண்டும் எனக் கூறி அந்தப் பெண்ணே வெள்ளாற்றுகரைக்கு அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த சுத்தியல் கற்களால் கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. அச்சமயம் அவ்வழியாக விவசாயி ஒருவர் வருவதை கண்டதும் ஸ்ரீதர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் நெய்வேலியில் வைத்து போலீசார் அவனை கைது செய்தனர்.
Tags :