விமானத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 10-01-2023 11:53:41am
விமானத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல்

மாஸ்கோவில் இருந்து வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது போலியானது என்பது தெரியவந்துள்ளது. மாஸ்கோவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது போலியானது. தேசிய பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என ஜாம்நகர் விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த விமானம் குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்கு திருப்பி விடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய தூதரகமும் பதில் அளித்துள்ளது.

 

Tags :

Share via