கிறிஸ்தவ ஆலயத்தில் கூட்டநெரிசல் குழந்தைகள் உட்பட 37 பேர் பலி

by Staff / 29-05-2022 01:55:38pm
கிறிஸ்தவ ஆலயத்தில் கூட்டநெரிசல் குழந்தைகள் உட்பட 37 பேர் பலி

நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.தென்கிழக்கு நகரமான போர்ட் ஹர்கோட்டில் கிங்ஸ் அசெம்பிளி  கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏராளமானோர் கலந்துகொண்டனர் தேவாலயத்தின் உணவு பெற வந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிறிய வாசல் வழியே முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர் .கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via