டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2 ஆம் கட்ட ஆய்வு

by Editor / 31-05-2022 07:44:54am
டெல்டா  மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2 ஆம் கட்ட ஆய்வு

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சைக்கு வந்த முதலமைச்சர் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே நடந்து வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இரவு 8.30 மணிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிலையில், இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

 

Tags : Chief Minister MK Stalin today conducted the 2nd phase of inspection in Delta districts

Share via