பால்கனி இரும்பு கேட்டில் சிக்கிக் கொண்ட குழந்தையின் தலை

by Staff / 03-06-2022 04:00:44pm
பால்கனி இரும்பு கேட்டில் சிக்கிக் கொண்ட குழந்தையின் தலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வீட்டின் பால்கனியில் உள்ள இரும்பு தடுப்பில் தலையுடன் சிக்கிக் கொண்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தாரா சுரம் கடை வீதியில் வசித்து வரும் விஜய் ஆனந்த் என்பவரின் குழந்தை அரிபிரியன் பால்கனியில் உள்ள இரும்பு கிரில் கேட்டை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது கம்பிகளுக்கு இடையே தலை சிக்கிக்கொண்டது. தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை தவித்த நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கம்பி இழுத்து வளைத்து குழந்தையை பத்திரமாக மீட்கப்பட்டது.

 

Tags :

Share via