ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்... சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்...

by Admin / 26-10-2021 03:38:33pm
ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்... சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்...

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தொண்டர்கள், எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சியின் அலுவலகங்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
 
இதுகுறித்து கூறிய சந்திரபாபு நாயுடு, அரசியலமைப்பை தொடர்ந்து மீறும் ஒய்.எஸ்.ஆர். ஆளும் மாநில அரசை பார்த்து மத்திய அரசு அமைதியாக இருக்க கூடாது என்றும், அவ்வாறு இருந்தால் தேசத்தின் சிதைவுக்கு விதைகளை விதைப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via