வழக்கறிஞர் காதலியோடு 5 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த வழக்கறிஞர் கைது
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் முரளி இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் பணிபுரியும் பல்லாவரம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் வழக்கறிஞர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறி கடந்த ஐந்து வருடங்களாக இருவரும் காதலித்து கணவன்,மனைவியாகவே இணைந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த பெண் வழக்கறிஞர் முரளியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு முரளி அந்த பெண் வழக்கறிஞரிடம் நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி திருமணம் செய்து கொள்ள முடியாது என இழிவாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த பெண் வழக்கறிஞர் இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் முரளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags : Lawyer arrested for living with girlfriend for 5 years and refusing to marry on caste grounds