20 வயதில் 24 காளைகளை அடக்கி காரை முதல் பரிசாக வென்ற வாலிபர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியில் 20 வயதான கார்த்திக் என்பவர் 24 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 19 காளைகளை பிடித்து முருகன் 2-வது இடமும்,11 காளைகளை பிடித்து பரத் 3 -வது இடமும் பிடித்தனர்.24 காளைகளை பிடித்து கார்த்திக் முதலிடம் பிடித்ததால் அவருக்கு முதலமைச்சர் சார்பில் வழங்கப்பட்ட காரை முதல் பரிசாக பெற்றார்.
Tags :