பாஜகவினரை சாடிய அமைச்சர் சேகர் பாபு

by Staff / 20-01-2024 04:32:31pm
பாஜகவினரை சாடிய அமைச்சர் சேகர் பாபு

அயோத்தியில் வரும் 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நாடு முழுவதும் உள்ள கோவில்களை சுத்தம்செய்ய வேண்டும் என பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோவில்களை பாஜகவினர் சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு “ஏற்கனவே சுத்தமாக இருக்கும் கோயில்களை, மீடியா போக்கஸ்களுக்காக மீண்டும் சுத்தம் செய்யும் விந்தை அந்த கட்சியில்தான் நடைபெறுகிறது. அதற்கு ஆளுநர் ரவியும் துணைபோய் வாலி, பாக்கெட் எடுத்துக் கொண்டு சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via