ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை

by Staff / 25-02-2023 05:23:10pm
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் பகுதியில் உள்ள நாயுடு தெருவினை சேர்ந்தவர் ரமணன் (வயது 45). இவரது மனைவி கமலா (வயது 42). இந்த தம்பதியினருக்கு நாகஜோதி (18) என்ற ஒரு மகள் உள்ள சூழலில், இன்று தேவிப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் ரமணன், கமலா, நாகஜோதி உள்ளிட்ட 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

அதைப் பார்த்த விவசாயி ஒருவர் ஓடி சென்ற பார்த்த போது, அவர்கள் மூவரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து ரமணன், கமலா, நாகஜோதி ஆகிய மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைத்த நிலையில், கமலா, நாகஜோதி ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமணனை புளியங்குடி அரசு மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சூழலில் தற்போது ரமணன் தென்காசி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரமணன் சிகிச்சை க்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

அவரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள சூழலில், இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via