பயன்படாத காருக்குள் விளையாடச்சென்று மூச்சு விடமுடியாமல் பரிதாபமாக பலியான 3 குழந்தைகள்

by Editor / 04-06-2022 11:23:28pm
பயன்படாத காருக்குள் விளையாடச்சென்று மூச்சு விடமுடியாமல் பரிதாபமாக பலியான 3 குழந்தைகள்

பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடச் சென்ற பாலர் பள்ளி தெருவினை சேர்ந்த நாகராஜன் நித்திஷா,
( 7 ) நித்திஷ் (5 ) வடக்கன் குளத்தை சேர்ந்த சுதன் அவரது மகன்கபிஷாந்த் (4) ஆகிய மூன்று குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சு விட முடியாமல் உயிரிழந்து விட்டனர். மூன்று   குழந்தைகள் காரில் டோர் லாக் ஆகி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்த சம்பவம் பணகுடி காவல்கிணறு பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணகுடி மருத்துவமனைக்கு  தமிழக சட்டப்பேரவைத் தலைவர்  அப்பாவு திருநெல்வேலி  நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் , வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா ஆகியோர் விரைந்து வந்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இச்சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர்  மகாலட்சுமி  விசாரணை செய்து வருகிறார்.

 

Tags : 3 children who died tragically after playing in an unused car and not being able to breathe

Share via