காதலிக்க மறுத்த மாணவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த இளைஞர்

by Staff / 08-06-2022 02:05:37pm
காதலிக்க மறுத்த மாணவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த இளைஞர்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர்.கூடமலையை  சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவியை  ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி  கல்லூரி செல்லும்போது தன்னை காதலிக்கும் கூறிய நிலையில் இதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் சாமிதுரை எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை நேற்றிரவு மாணவியின் வீட்டில் ஆட்கள் இல்லாத நோட்டமிட்டு சென்று தோட்டத்தில் பதுங்கி இருந்துள்ளார். மாணவி வெளியே வந்ததும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி அவளை வற்புறுத்தியதாகவும் மாணவி கூச்சலிட்டதால் கீழே தள்ளி தலையில் கல்லை தூக்கிப் தலையில் போட்டு காலால் மிதித்தும் கொடூரமாக தாக்கி விட்டு தடுக்க வந்த உறவினர்களையும் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via