இறந்துபோன மகனின் உடலை எடுத்துச்செல்ல 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை பணம் இல்லாததால் தெருத்தெருவாக பிச்சை எடுத்த பரிதாபம்

by Staff / 09-06-2022 12:18:37pm
இறந்துபோன மகனின் உடலை எடுத்துச்செல்ல 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை பணம் இல்லாததால் தெருத்தெருவாக பிச்சை எடுத்த பரிதாபம்

இறந்துபோன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முடியாததால் வேதனை அடைந்த வயதான தம்பதியினர் லஞ்சம் கொடுக்க தெருத்தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் நடந்துள்ளது.சாம்ஸடிபுரை  சேர்ந்தவர் மகேஷ் இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி உடலை வாங்க தனது மனைவியுடன் சென்றார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via