இரண்டு அரசு மருத்துவர்கள் பணிநீக்கம் -அமைச்சர்

by Editor / 21-06-2022 08:44:04am
இரண்டு அரசு மருத்துவர்கள் பணிநீக்கம் -அமைச்சர்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் சண்முகவடிவு பணி நேரத்தில் பணியில் இல்லாதாததும், மருத்துவர் தினகரன்  அவரது மகனை அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்திய காரணத்திற்காக இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ துறையில் உள்ள 4 ஆயிரம் காலி பணியிடங்கள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும், அக்னிபத் திட்டம் குறித்த கேள்விக்கு ராணுவ பணி என்பது தேச பணி அதனை ஒப்பந்த அடிப்படையில் செய்வது ஏற்புடையதாக இருக்காது எனவே இத்திட்டத்தை முதல்வர் கூறியதுபோல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ராசிபுரம் அடுத்த  போதமலையில் செய்தியாளர் சந்திப்பில் தகவல்.

 

Tags : Two government doctors sacked - Minister

Share via