வழியெங்கும் வாகன நெரிசல் அலைமோதும் அதிமுகவினர் களைக்கட்டிய வானகரம்

by Editor / 23-06-2022 09:26:18am
 வழியெங்கும் வாகன நெரிசல் அலைமோதும் அதிமுகவினர் களைக்கட்டிய வானகரம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெறவுள்ள நிலையில், பூவிருந்தவல்லி முதல் மதுரவாயல் வரை சுமார் 5 கி.மீ அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல்.பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-இனி ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தனித்தனி வாகனத்தில் வானரகம் நோக்கி புறப்பட்டுள்ளனர்.இதில் ஓபிஎஸ் பிரசார வாகனத்தில் வானகரம் புறப்பட்டுள்ளார். வழியெங்கும் தொண்டர்கள் கூட்டம் அலைமோதிவருகிறது.நுழைவு பகுதிகளில் பெண்கள் கும்ப மரியாதையை வழங்கிட வாரிசாயாக நின்று கொண்டுள்ளனர்.அதேபோன்று அதிமுகவினரும் அலைமோதி வருகின்றனர்.மேலும் மண்டபத்தின் நுழைவு பகுதியில் எம்ஜிஆர்,ஜெயலலிதா வேடமிட்டு 3 ஜோடியினர்  ஒவ்வொரு தோற்றத்திலும் நின்று கொண்டுள்ளனர்.அதிமுக தொண்டர்களின் எழுச்சியான கூட்டம் இருதரப்பில் யார்தரப்பை சார்ந்தது என கூறமுடியாவிட்டாலும் தேர்தலுக்குபின்னரும் அதிமுகவில் எழுச்சி குறையவில்லை என்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களை உருவாக்கியுள்ளது.பொதுக்குழுவே புதிருக்கு விடையளிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

 வழியெங்கும் வாகன நெரிசல் அலைமோதும் அதிமுகவினர் களைக்கட்டிய வானகரம்
 

Tags : Vanakaram weeded by overcrowded traffic jams all the way

Share via