கொலை தண்டனை கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி

by Staff / 26-03-2023 12:54:24pm
கொலை தண்டனை கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் லாரி ஓட்டுனர் இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் கொண்டு வந்திருந்தனர். அப்போது அவர் கழிவறைக்கு செல்ல வேண்டுமென கூறி கழிவறைக்குள் சென்றுள்ளார். உள்ளே இருந்த உடைந்த டைல்சால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்துள்ளனர். இச்சாம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via