குழந்தை என் ஜாடையில் இல்லை.. அடித்து கொன்ற தந்தை

by Editor / 17-03-2025 02:10:02pm
குழந்தை என் ஜாடையில் இல்லை.. அடித்து கொன்ற தந்தை

ஈரோடு மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தையை சுவரில் அடித்து கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழுமாத்தூரில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தாலும், தன் ஜாடையில் குழந்தை இல்லாததாலும் குமார் என்ற நபர் இந்த கொடூர செயலை செய்திருக்கிறார். தலையில் அடிப்பட்டு குழந்தை உயிரிழந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. கைது செய்யப்பட்ட குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via