காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்ற இளைஞர் மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில், காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்ற மகன், உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.முல்லைச்சேரி விளையைச் சேர்ந்த இளைஞர் அஜித், வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்றார். குலசேகரம் காவல்நிலையத்தில் அவர் கையெழுத்திட்டு வந்த நிலையில், கடந்த 23ம் தேதி காவல்நிலையத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில், அஜித் விஷமருந்தியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, இளைஞரின் பெற்றோரிடம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் கூறியதாக தெரிகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அஜித், மரணமடைந்த நிலையில், தனது மகனின் உயிரிழப்பிற்கு குலசேகரம் காவல்துறையினரே காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.மகனின் உடலை வாங்க மறுத்த தந்தை சசிகுமார், இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
Tags :