கர்ப்பிணிபெண்ணைகணவர் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம்.
மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின் ரானே கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்க '108' ஆம்புலன்சுக்கு கர்ப்பிணியின் கணவர் போன் செய்தார். ஆனால் 2 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை.
இந்நிலையில், வலியில் தவித்த தனது மனைவியை தள்ளுவண்டியில் கிடத்தி அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றார். அவரது கிராமத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இருந்த அந்த மையத்தில் மருத்துவரோ, செவிலியர் இல்லை. பின்னர் அரசு ஆம்புலன்ஸ் ஒன்றில் அங்கிருந்து ஹட்டாவுக்கு தனது மனைவியை அழைத்து சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைக்காததால், பின்னர் தமோ மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி மாற்றப்பட்டார்.
இதனிடையே, கர்ப்பிணி ஒருவரை அவரது கணவர் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :