கஞ்சா விற்பனை செய்த பாலிடெக்னிக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

by Editor / 02-07-2022 07:12:49pm
கஞ்சா விற்பனை செய்த பாலிடெக்னிக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

காரைக்குடி பகுதியில் வாட்சப் குழு மூலம் கல்லூரி மாணவர்களுக்கு  கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத்தகவலைத்தொடர்ந்து காவல்துறையினர் காரைக்குடி வடக்கு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது  கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்ததைத்தொடர்ந்து அவர்கள் மூன்றுபேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட   ஆயுதங்களை  பறிமுதல் செய்து காரைக்குடி வடக்கு பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : 3 polytechnic students arrested for selling ganja

Share via