திருப்பூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா:  3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை

by Editor / 20-09-2021 05:40:31pm
திருப்பூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா:  3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை

 

திருப்பூரில் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில், தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


தற்போது திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதை யடுத்து பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்க ளுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via