நிலத்தகராறு காரணமாக பெண்ணை உயிருடன் எரித்த மூன்று பேர்

by Editor / 04-07-2022 01:14:59pm
நிலத்தகராறு காரணமாக பெண்ணை உயிருடன் எரித்த மூன்று பேர்

மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தில் நில தகராறு காரணமாக பெண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.ராம் பியரி  என்ற பழங்குடியின பெண் உடலில் தீ வைத்து கருகிய நிலையில் தமது வயலில் கிடந்ததாக அவர் கணவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அரசு நலத்திட்ட த்தின் கீழ் ஒதுக்கித்தந்த  அந்த நிலத்தை அபகரிக்க முயன்ற சிலர் இந்த கொடிய செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பெண் உயிருடன் எரிக்கப் படும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களுக்கு பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த பாதகச் செயலில் ஈடுபட்ட 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து மூன்றாவது நபரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via