கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி
மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன் (53) இவரது மனைவி அமுதா (37) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அடிக்கடி மகாதேவன் குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்துவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. இரவு குடித்துவிட்டு மனைவியை தாக்கியும் தனது மூத்த மகன் ராஜராஜ சோழனை பீர் பாட்டிலால் உடலில் கிழித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அமுதா அருவாளை எடுத்து மகாதேவனை கழுத்தில் வெட்டி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகாதேவன் உயிரிழந்துள்ளார். பின்னர் தனது மகனுடன் வீட்டை பூட்டிவிட்டு காவல் நிலையத்தில் அமுதா ஆஜரானார். இந்த சம்பவம் குறித்து மணல்மேடு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Tags :