30 நாட்களுக்குள் பட்டா - தமிழ்நாடு அரசு அதிரடி

பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 30 நாட்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பட்டா மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்பிரிவு தேவை இல்லாத பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் உத்தரவுப்படி 30 நாட்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :