திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

by Staff / 13-10-2023 02:41:57pm
திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம்,  குற்றாலம் திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி மாத விசு திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

 அந்த வகையில், திரு குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி மாத விசு திருவிழாவானது கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

இந்த கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்த நிலையில், பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

 தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருவிலஞ்சி குமாரர் கோயில் சமேத வள்ளி தெய்வானையை குற்றாலநாதர் கோயிலுக்கு அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 12ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இன்று 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் தேர் முருகர் தேர் திருக்குற்றால நாத சுவாமி தேர் செண்பக குழல்வாய்மொழி அம்மன் தேர் ஆகிய நான்கு திருத்தேர்கள் அடங்கிய தேரோட்ட நிகழ்வும் வெகு சிறப்பாக  நடைபெற்றது.

 அதேபோல் வரும் 16ஆம் தேதி சித்திர சபையில் அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், பச்சை சாத்தி தாண்டவ தீபாரணையும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது 

மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த ஐப்பசி விசு திருவிழாவில் நாள்தோறும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்

 

Tags :

Share via