மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் : அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வம் கடிதம்
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பெயரில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓபிஎஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
Tags :