அதிகரிக்கும் கொரோனா முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

by Editor / 05-07-2022 04:08:58pm
அதிகரிக்கும் கொரோனா முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.தமிழகத்தில் அண்மைக் காலமாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் மொத்த தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதேபோல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் என அரசின் அறிவுறுத்தல்படி சுகாதார நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தி வருகின்றன.இந்நிலையில், தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில், அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் மட்டும் ஆயிரத்தை கடந்துள்ளது தொற்று எண்ணிக்கை. இதனையடுத்து, சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 


 

 

Tags :

Share via