200 அடி கிணற்றில் விழுந்து சிறுவன் பலி
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கோபர்டி கிராமத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்து வந்தது. கரும்பு வெட்டும் தொழிலுக்காக அவர்கள் இங்கு வந்திருந்தனர். இந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் திங்கள்கிழமையன்று 200 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் இன்று அதிகாலை சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
Tags :