உச்ச நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்புக்கு பிரதமர் வரவேற்பு

by Staff / 04-03-2024 04:59:40pm
உச்ச நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்புக்கு பிரதமர் வரவேற்பு

எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., லஞ்ச வழக்குகளில் சட்டமியற்றுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படாது என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. 1998 இல், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக தெலுங்கானா வந்துள்ள மோடி தெரிவித்துள்ளார். அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்க நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியது என்றார்.

 

Tags :

Share via