ஹைதியில் அவசர நிலை அமல்

by Staff / 04-03-2024 04:52:46pm
ஹைதியில் அவசர நிலை அமல்

கரீபியன் நாடான ஹைதியில் 72 மணி நேர அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. போர்ட் ஓ பிரின்ஸ் சிறையில் இருந்து ஆயிரக்கணக்கான கடின குற்றவாளிகள் நேற்று தப்பினர். அங்கு நடந்த மோதலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர், 4,000 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசர நிலை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via