தர்மபுரி 2 கொலை வழக்கு குற்றவாளிகள் செங்கோட்டை நீதி மன்றத்தில் சரணடைந்தனர்

by Editor / 22-07-2022 05:38:52pm
தர்மபுரி 2 கொலை வழக்கு குற்றவாளிகள் செங்கோட்டை நீதி மன்றத்தில் சரணடைந்தனர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பூதனஅல்லி வனப்பகுதியை ஒட்டி ஒரு செயல்படாத குவாரியில் கடந்த 18ஆம் தேதி இரண்டு ஆண்கள் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளனர்.

 இதுகுறித்து அதியமான் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கொலை செய்யப்பட்ட நபர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் நிவில் ராஜ் குரூஸ் என்பது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து அவர்களை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அந்த வழக்கில் சம்பந்தம் உடைய குற்றவாளிகள்ஜோசப் வின்செண்ட், ரகு,சுரேன் பாபு,விஷ்ணு வர்மன், ஆகிய 4 பேர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சுனில்ராஜா முன்னிலையில் சரணடைந்தனர்.

தர்மபுரி 2 கொலை வழக்கு குற்றவாளிகள் செங்கோட்டை நீதி மன்றத்தில் சரணடைந்தனர்
 

Tags :

Share via