பள்ளி மாணவியின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்குமூன்றடுக்கு பாதுகாப்பு

by Editor / 23-07-2022 10:49:34am
பள்ளி மாணவியின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்குமூன்றடுக்கு பாதுகாப்பு

 கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த பள்ளி மாணவியின் உடல் 11 நாட்களுக்குப்பின்னர்  இன்று இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்அடக்கம் செய்யப்படவுள்ளது .இதற்கிடையே மாணவியின் இறுதிச் சடங்கில், அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்கக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். மாணவியின் உடல் சொந்த ஊருக்கு  கொண்டு வரப்பட்ட நிலையில் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.சில பகுதிகளில் காவல்துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்
 

 

Tags : The body of the school girl will be cremated today under three-tier security

Share via