ஆட்சிக்கு வந்தால் கலவரக்காரர்கள் தூக்கிலிடப்படுவார்கள் - அமித் ஷா
பாஜக ஆட்சிக்கு வந்தால் பீகாரில் கலவரக்காரர்களை தூக்கிலிட்டு தக்க பாடம் புகட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களில், பீகார் ஷெரீப் மற்றும் நாலந்தா மாவட்டத் தலைமையகமான சஜாராமில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பல மோதல்கள் பதிவாகியுள்ளன. பீகார் ஷெரீப்பில் நடந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர். மார்ச் 30ஆம் தேதி ராம நவமி ஊர்வலத்தின் போது மோதல் தொடங்கியது.
Tags :