நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கைதி தப்பி ஓட்டம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் போலீஸ் சரகம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (42). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் நன்னடத்தையில் விதிமுறைகளை மீறி தலைமறைவாக இருந்ததால் சங்கரன்கோவில் ஆர்டிஓ பிறப்பித்த பிடிவாரண்டில் வாசுதேவநல்லூர் போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் ஆர்டிஓ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பாளை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இன்று மதியம் பாத்ரூம் செல்வதாக கூறி ஜீவா தப்பி ஓடி விட்டார். அவரை நெல்லை மாநகர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags : Prisoner admitted to Nellai Government Hospital escaped