அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு - பிப்., 15ஆம் தேதி தீர்ப்பு

by Staff / 07-02-2024 03:57:11pm
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு - பிப்., 15ஆம் தேதி தீர்ப்பு

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது, வரும் 15ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வருகிற 15ஆம் தேதி தீர்ப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அரசுப்போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய குற்றப்பிரிவுப்பதிவு செய்த 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என செந்தில் பாலாஜி மனுவில் தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via