நளினிக்கு 7வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தா நளினிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பரோல் வழங்கப்பட்டது.அவரது தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். தினமும் காட்பாடி காவல் நிலையத்தில் சென்று நளினி கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் நளினிக்கு 7வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags : Nalini gets parole extension for 7th time by one month