திருடபோன இடத்தில் கணவனுடன் படுத்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிக்கிய திருடன்

by Editor / 26-07-2022 09:45:52am
திருடபோன இடத்தில் கணவனுடன் படுத்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிக்கிய  திருடன்

சென்னை தண்டையார் பேட்டை வ.உ.சி நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார் (29), அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில், பால்கனி வழியாக திருட சென்றுள்ளார். அங்கு டேபிளில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பிக்க நினைத்த போது அந்த வீட்டில் கணவர், குழந்தையுடம், இளம்பெண் ஒருவர் படுத்திருந்தார். அவரை பார்த்த உடன் திருடன் மகேஷ்குமார் சபலப்பட்டு, அந்த பெண் அருகில் சென்று, சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த பெண் திடுக்கிட்டு எழுந்து, கத்தி கூச்சலிட்டார். இதனையடுத்து, மகேஷ்குமார் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது பெண்ணின் கணவரும் அக்கம்பக்கத்தினரும் ஒன்று கூடி, மகேஷ்குமாரை அடித்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின் மகேஷ்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீட்டுக்குள் நுழைந்து பணத்தையும் திருடி விட்டு கணவனுடன் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து திருடன் மாட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : The thief was caught cheating on the woman who was lying with her husband at the place of theft

Share via