நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கம்

by Editor / 04-07-2021 06:26:47pm
நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கம்

நாளை முதல் தமிழ்நாட்டில், மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப் போக்குவரத்து, கோயில்கள், மால்களில் உள்ள சில கடைகள் இயங்கத் தளர்வு அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத்தொடர்ந்து அரசுப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் உள்ள பேருந்து நிலையங்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

தயார் நிலையில் பேருந்துகள்

பேருந்து நிலையங்களில் உள்ள இருக்கைகள், கழிவறைகள், நடைபாதைக் கடைகள் அனைத்தும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு சோதனையோட்டம் செய்யப்பட்டது.

 

Tags :

Share via