தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு தீப்பற்றி எரிந்து சேதம்.

by Editor / 13-01-2023 08:41:04pm
 தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு தீப்பற்றி எரிந்து சேதம்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட்டுகள் உள்ளன எஸ்டேட்டு தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் வீடு கட்டி அதில் தாங்கி வேலை செய்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தின் வீடுகள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட்  முதல் பிரிவு தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் ஆறு வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம் ஆகியது.இன்று 
காலை 8 மணி அளவில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கும் சென்று உள்ளனர். அப்போது வேலம்மாள் என்பவர் வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்த  மக்கள்  எஸ்டேட் நிர்வாகத்திடம் தகவல் கொடுத்தனர். பின் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.ஒரு வீட்டில் பிடித்த தீ வேகமாக அருகில் இருந்த 6 வீடுகளுக்கு பரவியது.எஸ்டேட்  தொழிலாளர்கள் டிராக்டர் மூலம் தீயை அணைத்தனர். சிறிது நேரம் கழித்து தீ அணைப்பு துறை வாகனத்தின் மூலமாக வீட்டில் பிடித்த தீயை முற்றிலுமாக அணைத்தனர்.தொழில்லர்கள்  தயாநிதி, ஆரோக்கியமேரி, அண்ணமமால், உஷா, தேவி, வேலம்மாள், ஆகியோர் வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது வீட்டில் இருந்த டிவி சமையல் பொருட்கள் கட்டில் துணிமணி நகைகள் போன்ற அனைத்து பொருட்களும் சேதம் ஆகியது..தீயினால் ஏற்பட சேதம் சுமார் பத்து லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று விசாரணையில் தெரிவித்தனர்..

 

Tags :

Share via